ராயபுரத்தை ரவுண்டு கட்டிய கொரோனா!!

வியாழன், 9 ஏப்ரல் 2020 (13:16 IST)
சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை எத்தனை என மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
அதிலும் குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக திருவிக நகரில் 22 பேரும், அண்ணாநகரில் 19 பேரும், கோடம்பாக்கத்தில் 18 பேரும், தடையார்ப்பேட்டையில் 13  பேரும், தேனாம்பேட்டையில் 11 பேரும் உள்ளனர். 
 
சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை எத்தனை என மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த முழு விவரம் பின்வருமாறு... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்