ஓ.பி.எஸ் அமைதி காத்தது பெரிய விஷயம்: அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி

வியாழன், 23 ஜூன் 2022 (14:23 IST)
தர்மர் ஆக இருந்து ஓபிஎஸ் அமைதி காத்தது பெரிய விஷயம் என அரசியல் பார்வையாளர் துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித பிரச்சனையும் செய்யாமல் ஓபிஎஸ் அமைதி காத்து அதே நேரத்தில் தனது காரியத்தை சாதித்துக் கொண்டார்
 
இந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களின் அணுகுமுறை குறித்து பிரபல அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி கூறியபோது ’இந்த அளவுக்கு தர்ம சங்கடத்திற்கு உள்ளான சூழ்நிலையிலும் தர்மராக நின்று ஓபிஎஸ் அமைதி காத்தது பெரிய விஷயம் என்று கூறினார் 
 
மேலும் நாகரீகமற்ற முறையில் ஓபிஎஸ் அவமானப்பட்டு உள்ளார் என்றும் இது தொண்டர்களுக்கு அவர் மீதுள்ள பற்றை அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்