எங்கள் ஊரில் அழகான பெண்கள் யாரிடமும் பேசமாட்டார்கள்; ஆனால் சுவாதி என்னிடம் பேசினார்!

வெள்ளி, 15 ஜூலை 2016 (11:40 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமாரை கைது செய்து 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
 
இந்த விசாரணையில் ராம்குமார் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. சுவாதியை எதற்கு கொலை செய்தாய் என காவல் துறையினர் கேட்டனர்.
 
மேன்சன் வழியாக சுவாதி ரயில் நிலையத்துக்கு செல்லும் போது தான் முதன் முதலில் பார்த்ததாகவும், சுவாதியை பார்த்த முதலே அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்ததாக கூறினார் ராம்குமார். அதனால் அவரிடம் பேச அவரை பின் தொடர்ந்தேன்.
 
எங்கள் ஊரில் அழகான பெண்கள் இப்படி யாரிடமும் பேசமாட்டார்கள். ஆனால் சுவாதி என்னிடம் பேசியதால் அவரை காதலிக்க தொடங்கியதாக ராம்குமார் கூறினார். பின்னர் ராம்குமாரின் காதலை ஏற்காமல் அவரை தேவாங்கு என அசிங்கமாக திட்டியதால் சுவாதியை மிரட்டவே அரிவாளால் வெட்டியதாக ராம்குமார் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்