மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்திய-இலங்கை மீனவர்களுக்கிடையிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தக்கோரியும், இலங்கை சிறைகளில் உள்ள 29 மீனவர்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி டிசம்பர் 5ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.