தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: மருத்துவர்களுடன் கட்டுபாடுகள் குறித்து ஆலோசனை!

செவ்வாய், 23 மார்ச் 2021 (11:42 IST)
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை. 

 
இந்தியாவில் 5 மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 85 சதவீதம் அளவிற்கு பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த ஐந்து மாநிலங்களில் தமிழகம் இல்லை என்பது ஒரு ஆறுதலான செய்தியாக இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று முன்பை விட இப்போது அதிகமாக பரவி வருகிறது. 
 
இந்நிலையில், தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவை உள்ளதா என ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்