தமிழகம் முழுவதும் கோடை மழை; மகிழ்ச்சியில் மக்கள்

புதன், 15 மார்ச் 2017 (19:15 IST)
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொடை மழை பெய்து வருகிறது. வெயில் காலம் தொடங்கும் நேரத்தில் இப்படி மழை பெய்வது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 

 
வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கேடை காலம் தொடங்கும் நேரத்தில், மழை பெய்து வருவது, வெப்பத்தை தனித்து குளுமை பரவி வருகிறது. கோவை, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
 
கடந்த சில வாரங்களுக்கு வறட்சியில் இருந்த சோத்துப்பாறை அணையில் தற்போது நீர் அதிக அளவில் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.  
 
மேலும் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 17 செமீ மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்