நள்ளிரவு முதல் மழை: குளிர்ந்தது சென்னை

புதன், 21 நவம்பர் 2018 (07:39 IST)
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் உள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் மாம்பலம், மதுரவாயல், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், தாம்பரம் சுற்றுவட்டரா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை தியாகராயநகர், கிண்டி, மதுரவாயல், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், பல்லாவரம், தாம்பரம், வேளச்சேரி, தரமணி, அடையாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று மிலாடி நபி காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால் சென்னை மக்கள் மழையை வீட்டில் இருந்து ரசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்