தமிழ்நாட்டில் மீண்டும் மழை.. 6 நாட்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு..!

வியாழன், 7 டிசம்பர் 2023 (13:18 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்தது என்பதும் குறிப்பாக மிக்ஜான் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே ஸ்தம்பித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் 6 நாட்களுக்கு மீண்டும் மழை பொழியும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்றும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் டிசம்பர் 9ஆம் தேதி  நீலகிரி, கோயம்புத்தூர்,திருப்பூர் , தேனி, திண்டுக்கல்,  மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்