சென்னையில் 24 பள்ளிகளுக்கு 29 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

வெள்ளி, 27 நவம்பர் 2015 (08:33 IST)
மழை வெள்ளம் காரணமாக, சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
மழை காரணமாக நீண்டநாள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் பள்ளிகள் திறப்பப்பட்டன.
 
ஆனால், சென்னையில் 24 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்டிந்தது. இந்நிலையில், அந்த பள்ளிகளுக்கு வரும் 29 ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்