சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சனி, 28 பிப்ரவரி 2015 (13:57 IST)
சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் குமரி முனை இடையே காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. குமரிக் கடல் பகுதியில் ஒன்றை கிமீ உயரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
 
காற்று மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மழை பெய்கிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்