தமிழகத்தில் மேலும் 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்

திங்கள், 20 அக்டோபர் 2014 (16:40 IST)
கடலோர தமிழகத்தின் இலங்கைக்கு இடையே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், அதன்பிறகு படிப்படியாக மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிக கன மழை பெய்யும் என்றும், சென்னையிலும் வானம் மேக மூட்டமாகவே இருக்கும் என்றும், சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்