முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூலை வெளியிட்ட ராகுல்காந்தி!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:43 IST)
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள உங்களின் ஒருவன் என்ற சுயசரிதைப் புத்தகத்தை ( பாகம் -1) காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி வெளியிடும்  நிலையில், இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம்  மூலம் சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி.

இதையடுத்து தற்போது  நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் சுயசரிதை உங்களில் ஒருவன் நூலை ராகுல்காந்தி வெளியிட, இதை கேரள முதல்வர் விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சி தலைவர்   தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தலைவர்களுக்கு நடிகரும் என்.எல்.ஏவுமான  உதய நிதி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

"உங்களில் ஒருவன் - 1" நூல் வெளியீட்டு விழா நேரலை: https://t.co/nvzFrdlCYv

— M.K.Stalin (@mkstalin) February 28, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்