திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இண்டஸ்ட்ரியல் லா என்ற பாடத் திட்டத்தின் தேர்வு இன்று நடைபெற இருந்தது. ஆனால், அந்த பரிட்சையின் தேர்வின் முன்கூட்டியே வெளியில் வந்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுத்து, தேர்வினை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 106 கல்லூரிகளுக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.