ஒருநாள் முதல்வர் போல.. ஒருநாள் போலீஸ்! – புதுச்சேரியில் புதுமை!

செவ்வாய், 8 மார்ச் 2022 (10:28 IST)
சர்வதேச பெண்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி காவல்துறை மாணவி ஒருவரை ஒருநாள் காவலராக பணியமர்த்தியுள்ளது.

பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை பெண்களை போற்றும் வகையில் கல்லூரி மாணவி ஒருவரை ஒருநாள் காவலராக அறிவித்துள்ளது. புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி மாணவி நிவேதிதாவை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒருநாள் காவல் அதிகாரியாக நியமித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்