புதுச்சேரி தொகுதியை என். ஆர். காங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக

வியாழன், 21 பிப்ரவரி 2019 (19:36 IST)
மக்களவை தேர்தலில் அதிமுக - என்.ஆர் கங்கிரஸ் சார்பில் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த ஒரு தொகுதி புதுச்சேரியாகும்.இது குறித்த ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்தாகியுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ,என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
ஏற்கனவே பாமக, பாஜக ஆகிய கட்சிகள் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸு கட்சியும்  இணைந்துள்ளது.
 
தற்போது கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்கள் மெகா கூட்டணியின் குறித்து  மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 
 

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்