இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக மக்கள் நல கூட்டணியில் நீடித்து வருகிறது. பல கட்சிகள் தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என தவமாய் தவம் இருந்தது. ஆனால் வைகோவின் பேச்சை கேட்டு கட்சியினரின் எதிர்ப்பையும் சம்பாதித்து இந்த கூட்டணிக்கு வந்தார் விஜயகாந்த். ஆனால் விஜயகாந்தின் பேச்சை வைகோ இந்த விஷயத்தில் கேட்காமல் போனது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் பிரேமலதா இந்த மாநாட்டை தற்போது புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளார். விஜயகாந்த் இந்த மாநாட்டுக்கு வந்தாலும், வைகோ மீதானா அதிருப்தி மாறவில்லை என்பதை பிரதிபலிப்பதாகவே பிரேமலதாவின் இந்த புறக்கணிப்பு உள்ளது.