பொங்கல் விழாக்கள் ஒத்திவைப்பு- தமிழக அரசு உத்தரவு

புதன், 5 ஜனவரி 2022 (17:05 IST)
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நடத்தும் அனைத்து பொங்கல் விழாக்களும் கொரொனா பரவல் காரணமாக ஒத்திவைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப்  பரவி வருகிறது.  இந்தியாவில் இதுவரை1000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில்,இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கொரொனாவால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி  முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நடத்தும் அனைத்து பொங்கல் விழாக்களும் கொரொனா பரவல் காரணமாக ஒத்திவைத்துள்ளது.

 தமிழக அரசு  இன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்