இது குறித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழக பிரிவுத் தலைவர் முகம்மது இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறை ஒன்றையே தனது சித்தாந்தமாக கொண்டு அரசியல் நடத்தி வரும் பா.ஜ.க வின் உண்மை முகம் மீண்டும் ஒருமுறை தோலுரிக்கப்பட்டுள்ளது.
திப்பு சுல்தான் நினைவு தினத்தில் பிரச்சினை, ஆம்பூரில் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல், ஏர்வாடி ஹாஜா முகைதீன் படுகொலை, திருவிதாங்கோடு முஸ்லிம்களின் வாகனங்கள் மீதான தாக்குதல், மதுரையில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு போஸ்டர் பிரச்சாரம் என இவர்களின் வன்முறை பட்டியல் நீள்கின்றது.
மேலும், இந்த படுகொலைக்கு பின் உள்ள அனைவரையும் காவல்துறை கைது செய்திட வேண்டும். சிறிது தாமதமானாலும், கொலைக் குற்றவாளிகளை கைது செய்துள்ள தமிழக காவல்துறை பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.