தற்போதைய அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நன்றாக யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நாளை வரை முதலமைச்சர் பதவியில் இருப்பாரா என்பதே கேள்விக்குறிதான். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாளை வரை அவர் பதவியில் தொடர இறைவன் தான் அருள் புரிய வேண்டும். எம்.ஜி.ஆர். ஆரம்பித்து, ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க. கட்சி இன்று முடிந்து விட்டது என்றார்.