இதனால் கோபமடைந்த அதிமுக அமைச்சர்கள் சிலர் இங்கு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அதிமுக பொதுச்செயலாளர் தான் இருக்கிறோம். ரவுடிகள் யாரும் இல்லை. இது ஒன்றும் பொது இடமல்ல, தனியார் இடம். எனவே நீங்கள்தான் இங்கிருந்து வெளியேறவேண்டும் என்றனர்.
இதனால் சசிகலாவை விடுதியில் இருந்து வெளியேற்றி போயஸ் கார்டனுக்கு செல்ல வைக்க போலிசார் முதலில் அங்கு மின்சார இணைப்பை துண்டித்தனர். பின்னர் விடுதியில் இருக்கும் ஜெனரேட்டருக்கு தேவையான எரிபொருளை யாரும் கொண்டு சென்றுவிடாதபடி விடுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் சசிகலா கடும் டென்ஷன் ஆனார் இரவு 9.3௦ மணி வரை இந்த நிலைதான் நீடித்தது. அதன் பின்னர் தான் சசிகலா போயஸ் கார்டன் புறப்பட்டு சென்றார்.