இந்த வழக்கில் பல மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், ராம்குமார் குற்றவாளி இல்லை என்று ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் கூறிவருகிறார். சமூக வலைதளத்திலும் ஒரு அமைப்பினர் இது ஆணவக் கொலை என்றும், இதில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்றும், கூறிவருகின்றனர்.
காவல்துறையினர் ராம்குமாரை குற்றவாளி என்று நிரூபிக்க பல தரப்பில் ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் ராம்குமாரை வீடியோ எடுத்து, முந்தைய சிசிடிவி கேமிரா வீடியோ பதிவுடன் ஒப்பிட்டுப் பார்க்க காவல்துறையினருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ராம்குமாரை வீடியோ, புகைப்படம் மற்றும் உடல் தொடர்பான அளவீடுகள் எடுப்பதற்கு, தேவையான ஏற்பாடுகளை புழல் சிறை-2 கண்காணிப்பாளர் செய்து தரவேண்டும். காவல்துறை புகைப்பட பிரிவில் துணை ஆய்வாளர் தகுதிக்கு குறையாத நபர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டும்.