நெடுவாசலில் போலீஸ் குவிப்பு: மெரினாவை போல இங்கும் தடியடியா?

வியாழன், 2 மார்ச் 2017 (15:07 IST)
நெடுவாசல் போராட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை கலைக்க மெரினாவில் தடியடி நடத்தியது போன்று நெடுவாசலிலும் நடத்த உள்ளார்களா என அனைவரும் சந்தேகப்பட்டு வருகின்றனர்.


 

 
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஈடுப்பட்டுள்ளனர்.
 
பாஜக கட்சி தலைவர்கள் அனைவரும் ஹைட்ரோ கார்பன திட்டம் பாதுக்காப்பனது என மத்திய அரசுக்கு ஆதரவாக குறல் கொடுத்து வருகின்றனர். நேற்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பனை திட்டத்தை நிறுத்த மத்திய அரசுக்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
 
இதையடுத்து அரசு சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது என தெரிவிக்கப்பட்டது. மேலும் நெடுவாசல் மக்கள் போரட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்தார். 
 
ஆனால் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் முழுமையாக இந்த திட்டத்தை ஒழிக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறி இன்று 15வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் போராட்டக் களத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது. அதேபோன்று நெடுவாசலிலும் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மெரினாவில் தடியடி நடைப்பெற்ற முந்தைய நாள் இரவுதான் போராட்ட களத்திற்கு காவல்துறை உள்ளே சென்றனர். அவர்கள் உள்ளே மறுநாள் தடியடி நடைப்பெற்றது. தற்போது அதேபோல் நெடுவாசலிலும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்