இந்நிலையில் மெரினா கடற்கரையில் டீ கடை வைத்துள்ள, திருவல்லிகேணி லாக் நகரைசேர்ந்த அமுதா என்ற பெண் நேற்று காலையில் அண்ணாசதுக்கம் காவல்நிலையத்திற்கு வந்து மைமூன்ராணியின் தொலைந்து போன நகைபையை பத்திரமாக ஒப்படைத்தார். அதில் தொலைந்து போன நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பத்திரமாக இருந்தது. இதையடுத்து, காவல்துறையினர் மைமூன்ராணியை நேரில் அழைத்து, அவற்றை ஒப்படைத்தனர். இது தொடர்பாக, நல்ல உள்ளம் கொண்ட அமுதாவை நேர்மையை பாராட்டி நேரில் அழைத்து காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் வெகுமதி அளித்தார்.