கள்ளக்காதலி வீட்டில் பாமக பிரமுகர் தற்கொலை

செவ்வாய், 5 ஜூலை 2016 (09:45 IST)
அம்பத்தூர் அருகே பாமக பிரமுகர், கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 


 

 
அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் திருவள்ளூர் மாவட்டம் பாமக துணை செயலாளரக இருந்தார். திருவேங்கடம் என்பவருக்கும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
 
கடந்த ஒரு வாரம் முன் திருவேங்கடத்துக்கும் பூங்காவனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் பூங்காவனம் வீட்டுக்கு ஒரு வாரமாக செல்லவில்லை. 
 
இந்நிலையில் நேற்று காலை திருவேங்கடம் பூங்காவனம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்