சில நேரங்களில் சசிகலா புஷ்பாவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த கேள்விக்கு பதில் அளித்த சசிகலா புஷ்பா, என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஆதரவாக இருக்கிறது.
பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர். பிரதமரின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அராஜகமான போக்குடன் செயல்பட்டு, முதல்வரை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று யாரும் நினைத்தால் கட்டாயம் குரல் கொடுப்பேன் என்றார்.