தொடரும் அரசியல் குழப்பம்! – புதுச்சேரி வரும் பிரதமர் மோடி!

புதன், 17 பிப்ரவரி 2021 (13:41 IST)
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி புதுச்சேரி செல்ல இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸின் இடம் 13 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி ஆளுனராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அரசியல் களேபரங்களுக்கு நடுவே பிரதமர் மோடி பிப்ரவரி 25ல் புதுச்சேரி வருகிறார். பாஜக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பேச உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்