புதன்கிழமை கடலூர் புதுக்குப்பத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அப்பகுதி மக்களுக்கும் சம்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுவரையில் எங்கள் பகுதியை எட்டிப்பார்க்காமல் எப்படி ஓட்டு கேட்டு வருவீங்க, என்று கேட்டனர்.
இதனால் கோபமடைந்த மீனவரணி செயலாளர் தங்கமணி பொதுமக்களை நெட்டித்தள்ளி, சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். மேலும் கடுமையான வார்த்தை கூறித் திட்டியுள்ளார். இதனால் அதிமுகவினர் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.