தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பு ராஜீனாமா கடிதத்தை பெற்றுக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் பரபரப்பு பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதலே, தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் சசிகலா தரப்பிற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதில், சசிகலாவை அவரின் பின்னால் இருந்து, அவரின் கணவர் நடராஜனே இயக்குகிறார் என்று பொதுவாக கூறப்படுகிறது.