மக்களே உஷார்..! அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்..! வானிலை மையம் எச்சரிக்கை..!

Senthil Velan

வியாழன், 15 பிப்ரவரி 2024 (16:03 IST)
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றும் (15.02.2024), நாளையும் (16.02.2024) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: சூடு பிடிக்கும் மக்களவைத் தேர்தல்.! விருப்ப மனு பெறும் தேதியை அறிவித்தது திமுக..!!
 
மேலும் 17.02.2024 முதல் 21.02.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்