புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்த பழ.கருப்பையா.. கட்சியின் பெயர் அறிவிப்பு

வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (18:50 IST)
அதிமுக திமுக என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த பழ கருப்பையா தற்போது புது கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் என பல கட்சிகளில் மாறி மாறி இருந்த பழ கருப்பையா இன்று தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற கட்சியினை தொடங்கியுள்ளார்.
 
தனது கட்சிக்கான முதல் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் பேட்டி அளித்த போது கட்சியின் கொள்கை நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம் எனவும் கட்சியின் நிறம் பச்சை நிறம் என்றும் அதில் தமிழ்நாடு நிலத்தின் படம் மற்றும் காந்தி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் திமுகவை திமுகவை கடுமையாக விமர்சித்த பழ கருப்பையா திமுகவுக்கு அடிபணிந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்