இந்த பேட்டியில் பேசிய அவர் தமிழக அமைச்சர்களை மொல்லமாரிகளுடன் ஒப்பிட்டு பேசினார். அதாவது, மொல்லமாரிகள் காவலர்களுக்கு பயப்படுவதுபோல நமது மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் டெல்லியில் உள்ள மோடி அரசுக்கு பயப்படுகிறார்கள்.
எனவே இவர்களால் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக எதையும் செய்ய முடியாது. தமிழக மக்களை காப்பாற்றவும் முடியாது. காவிரி நீர் சிக்கலாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி எந்த விஷயத்திலும் அவர்களால் மத்திய அரசை எதிர்த்து நிற்க முடியாது என்றார் கடுமையாக.