கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தனர்: மௌனம் கலைத்தார் பன்னீர் செல்வம்

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (22:39 IST)
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 45 நிமிடங்களாக தியானத்தில் அமர்ந்திருந்தார். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தியானத்திலிருந்து எழுந்த அவர் செய்தியாளகளை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது,


 

அடிமட்ட தொண்டர்கள் விரும்பும் ஒருவரே அதிமுக பொதுச் செயலாளராக வரவேண்டும். கட்சியை காப்பற்ற தனி ஒருவனாக நின்று போராடுவேன். கட்டாயப்படுத்து என்னை ராஜினாமா செய்ய வைத்தனர் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்