பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர் பன்னீர் செல்வத்தை கண்டுகொள்ளாமல், சசிகலாவிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் கொடுமை தொடர்ந்து நடந்துவருவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகவே அரசியல் பார்வையார்கள் கருதுகிறார்கள்.
முதல்வர் ஒரு விழாவிற்கு வருகிறார் என்றால் அவருக்கு எப்படியான மரியாதைகள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பாதுகாப்பு அதிகாரிகள் படை சூழ முதல்வரை விழா மேடைக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். ஆனால் இங்கோ சசிகலாவை விழா குழுவினர் அழைத்து சென்றபோது கூட்டத்தோடு கூட்டமாக பன்னீர் செல்வமும் உள்ளே சென்ற காட்சி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.