இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இதையடுத்து பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடிகள் அதிகரித்தன. உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பொதுப்பணிதுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவர் சென்னையின் முக்கிய இடங்களில் வீடு தேடினார். தற்போது போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்திற்கு அருகே ஒரு வீட்டினை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து உடனடியாக அந்த இல்லத்தில் குடியேற முடிவு செய்துள்ளார்.