அதேபோல், அக்கல்லூரி மாணவர்களிடையே அவ்வப்போது மோதலும் ஏற்படுவது உண்டு. இந்நிலையில், 5 மாணவர்கள் இன்று காலை கத்தியுடன் கல்லூரிக்கு வந்தது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த நிர்வாகம் அவர்களிடம் விசாரணை நடத்தியது. அந்த விவகாரத்தில் மேலும் பல மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 மாணவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். மேலும், இன்று மாலை முதல் நாளை வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.