இந்நிலையில் இன்று அதிரடியாக சசிகலா முன்னர் ஜெயலலிதாவுக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டார். அதில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை என சசிகலா குறிப்பிட்டு இருப்பது முக்கியமான ஒன்றாகும்.