வெறும் 32% மட்டுமே வாக்குப்பதிவு: என்ன செய்கிறார்கள் சென்னை வாக்காளர்கள்?

சனி, 19 பிப்ரவரி 2022 (17:58 IST)
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 47.18 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக கூறப்படுகிறது
 
மேலும் சென்னையில் மிக குறைவாக சுமார் 32 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளது. மீதி உள்ள 68 சதவீதம் சென்னை மக்கள் வாக்களிக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் பெரும்பாலும் வெளியூர்களில் உள்ள பொதுமக்கள் இருப்பதால் விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு சென்று உள்ளதால் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது
 
 மேலும் சென்னையை பொறுத்த வரையில் இந்த தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலுமே குறைவான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்