ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் மேலும் சிலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: மொத்த பாதிப்பு 44ஆக உயர்வு

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (06:59 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் நேற்று வரை இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் 40 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் நான்கு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் பரவி வரும் நிலையில் நேற்று மேலும் இருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மகாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கூடுதலாக 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் நோயாளிகள் 44 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்