நாளை சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை: பக்தர்கள் அதிருப்தி

புதன், 12 ஜனவரி 2022 (13:07 IST)
நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்ற நிலையில் சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் நாளை காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் சென்னை பார்த்தசாரதி கோவிலில் நாளை சொர்க்கவாசல் பார்க்க அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்