திருச்சியில், மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு மையத்தை மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுக்க, இந்த மாத இறுதிக்குள் சுமார் 7,300 சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பித்த 40 ஆயிரம் பேரில் 38 ஆயிரம் பேர் தேர்வெழுதினர், முடிவில் 7,300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.