பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னரே தெரிவிப்போம் என்றார். மேலும், வெற்றி பெறும் அணியுடன்தான் கூட்டணி அமைப்போம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், சேகர், விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்கள் நலன், குறைகள் கேட்டறிதல், தீர்வு காண வழிவகைகள், பிரச்சனை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கி மேம்படுத்தும் வகையிலும், சட்ட பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்திலும் மாநில ஆணையம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.