நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி பெறும் நகரங்கள்! – டாப் 10 பட்டியலில் தமிழக நகரங்கள்!

புதன், 24 நவம்பர் 2021 (08:28 IST)
மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் இரண்டு தமிழக நகரங்கள் இடம்பெற்றுளன.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நிலையான வளர்ச்சியை எட்டுவதில் முன்னேற்றம் கண்டு வரும் நகரங்களின் பட்டியலை முதன்முறையாக தரவரிசைப்படுத்தியுள்ளது.

அதன்படி 2030க்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதில் வெற்றி காணும் டாப் 10 நகரங்களில் சிம்லா முதல் இடத்தில் உள்ளது. தமிழக நகரங்களான கோயம்புத்தூர் இரண்டாவது இடத்திலும், திருச்சி 8வது இடத்திலும் உள்ளது. மோசமான செயல்பாட்டுக்கான நகரங்களாக இறுதி தர வரிசையில் மீரட், ஆக்ரா, கொல்கத்தா ஆகிய நகரங்கள் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்