பேட்டி எடுத்தவரை மடக்கிய நிர்மலா சீதாராமன்: இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்!~

திங்கள், 22 பிப்ரவரி 2021 (21:06 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி பொதுவாக வைரலாகும் என்பது தெரிந்தது அந்த வகையில் சமீபத்தில் தமிழின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று நிர்மலா சீதாராமன் அவர்களை பேட்டி எடுத்தது. அந்த பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எதிர் கேள்வி கேட்ட கேட்டதால் பேட்டி எடுத்தவர் அதிரச்சி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது 
 
மாற்றுக் கட்சியில் இருந்த ஊழல் செய்தவர்கள் உங்கள் கட்சியில் சேர்ந்து விட்டால் அவர்கள் புனிதர்கள் ஆகி விடுவார்களா? என்ற கேள்வியை பேட்டி எடுத்தவர் கேட்டார் அப்போது நிர்மலா பெரியசாமி ’மாற்றுக் கட்சியில் ஊழல் செய்தவர் அந்த கட்சியில் இருக்கும் போது அவரை நீங்கள் பேட்டி எடுத்தது உண்டா? ஊழல் செய்தீர்களா? என்று கேட்டதுண்டா? அப்படி கேட்டிருந்தால் ஒரே ஒரு வீடியோவை எனக்கு காண்பியுங்கள் பார்ப்போம் என்று கூறினார்.
 
மாற்றுக் கட்சியில் செய்தபோது இருக்கும்போது கேள்வி கேட்காமல் எங்கள் கட்சிக்கு வந்த பிறகு மட்டும் கேள்வி கேட்பது ஏன் என்று பதிலடி கொடுத்தார் இந்த பதில் அடியால் பேட்டி எடுத்தவர் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்