இன்று 25ஆவது நாளாக அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொ.மு.ச. தலைவர் திருமாவளவனை என்.எல்.சி. நிர்வாகம் பணி நீக்கம் செய்வதாக நோட்டீசு ஒட்டியது. இதனால் என்.எல்.சி.யில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக நேற்று தொ.மு.ச. அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், ஒருங்கிணைத்த ஒப்பந்த தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.