தென்மேற்கு வங்க கடலில் நாடா புயல் உருவாகி, அது காரைக்கால் அருகில் நேற்றுக் காலை கரையைக் கடந்தது. இதனால், கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இது வரும் 9ம் தேதி ஆந்திராவிற்கும் ஒடிசாவிற்கும் இடையில் கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயல் தமிழக கடற்கரை நோக்கி வந்தால், பலத்த மழை தமிழகத்தில் பெய்யும்.