’கொடூரம்’ - பிறந்த பச்சிளம் குழந்தை: கழுத்தை நெறித்து கொலை!

வியாழன், 29 செப்டம்பர் 2016 (00:15 IST)
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ரயில்நிலையம் அருகேயுள்ள குப்பை தொட்டியில் இறந்த நிலையில் ஆண்குழந்தையின் சடலம் ஒன்று இருந்துள்ளது.


 
 
இதை பார்த்த மக்கள் மீஞ்சூர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தும், காவல்துறையினர், குப்பை தொட்டியில் ஆண்சிசு இருப்பதை பார்த்துவிட்டு அதை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
 
இதை அடுத்து, பொதுமக்கள், காவல்துறை உயரதிகாரிக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து,  காவல்துறையினர், குழந்தையின்  உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை, தொப்புள் கொடியைக்கூட அறுக்காமல், குழந்தையின் கழுத்தில் பாவாடை நாடாவை சுற்றி இறுக்கி கொன்று குப்பையில் வீசியது தெரியவந்துள்ளது. அது, யாருடைய குழந்தை என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்