மக்களுடைய எதிர்பார்ப்பை செய்ய வேண்டிய அரசின் கடமை - நயினார் !

திங்கள், 12 ஜூலை 2021 (09:00 IST)
மாநில மக்களுடைய எதிர்பார்ப்பை செய்ய வேண்டியது அரசின் கடமை என்று திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேச்சு. 

 
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வெறுப்பேற்றும் வரும் திமுகவுக்கு பதிலடியாக தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்று உருவாக்க வேண்டும் என பாஜக தரப்பில் இருந்து குரல் எழுந்து வருகிறது. 
 
இந்நிலையில், மாநிலங்கள் இரண்டாக பிரிப்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும் நோக்கத்தையும் உணர்த்துகின்றது. மாநில மக்களுடைய எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை என்று திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்