ஜெ.வின் மறைவுக்கு பின், அதிமுகவில் பெரிதாக அவர் தலைகாட்டவில்லை. அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், சசிகலா பின்னால் சென்ற போதும் இவர் போயஸ்கார்டன் பக்கமே செல்லவில்லை. மேலும், சசிகலாவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறியதோடு, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பினார் நாஞ்சில் சம்பத்.
என்னுடைய திருமணத்திற்கு பின் என்னுடைய மனைவியுடன் நான் அதிக நாட்கள் செலவழித்தது இல்லை. பலமுறை அரசியல் மேடைகளிலேயே தாக்கப்பட்டேன். சிறைக்கும் சென்றுள்ளேன். ஆனால், மேடைகளில் பேசாதீர்கள் என அவர் ஒருநாளும் கூறியது இல்லை. என்னை அவர் புரிந்து கொண்டு என்னுடன் வாழ்க்கை நடத்தினார்.
எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என அவர் கேட்டதில்லை. என் பிள்ளைகள் மற்றும் என் பெற்றோர்கள் அனைவரையும் அவள் கவனித்துக் கொண்டாள். அதனால் எனக்கு குடும்ப சுமையே இல்லை. கடந்த 8 மாதமாக எனக்கு எந்த வருமானமும் இல்லை. அதனால், தன்னுடைய நகைகளை அடகு குடும்பத்தை அவர்தான் காப்பாற்றி வருகிறார். எனக்கான சிலுவை அவர் சுமந்து வருகிறார். மணம் முடித்த நாள் முதல் கணவனே கண் கண்ட தெய்வம் என அவர் வாழ்ந்து வருகிறார். எனக்கு எல்லாம் அவர்தான்” என அவர் தெரிவித்துள்ளார்.