ஆணவக் கொலை - 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Sinoj

திங்கள், 19 பிப்ரவரி 2024 (19:25 IST)
கடலூர் மாவட்டம் ஆதிவராகநத்தத்தில்  நடந்த ஆவணக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு  சரவணன் என்பவரை பதிவுத் திருமணம் செய்த சீதா கொலை செய்யப்பட்டார்.
 
காதல் திருமணம் செய்த சரவணனே குடும்பத்தினருடன் சேர்ந்து, சீதாவை கொலை செய்து உடலை எரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சீதாவை திருமணம் செய்ததற்கு சரவணன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் சீதா கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த  வழக்கு  விசாரணை நடந்து வந்த நிலையில், கடலூர் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு  நீதிமன்றம், 'சரவணன், அவரது தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி' உத்தரவிட்டுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்