மெடிக்கலில் மருத்து வாங்கிக் கொடுத்த தாய்…குழந்தை உயிரிழப்பு!

வியாழன், 6 ஜனவரி 2022 (16:34 IST)
திருச்சி மாவட்டத்தில் வயிற்று  வலிக்கு மெடிக்கலில் வாங்கிய மருந்து சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்பு  நாதரபும் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்  தனது குழந்தை வயிற்று வலியால் துடிக்கவே  அவர் அருகில் உள்ள மருத்துவரை ஆலோசிக்காமல் மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட குழந்தையின் உடல் நிலையில் மோசமடைந்துள்ளளது.

பின்னர், அக்குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்